Thursday 1 September 2011

யுவன்சங்கர் ராஜா திருப்பதியில் டும்.. டும்..

திருப்பதி, செப். 1:


இசைஞானி இளையராஜா மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா திருமணம் திருப்பதியில் நடந்தது.
பிரபல இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. இவர் தமிழில் 85 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன், ராம், சண்டைக்கோழி, பருத்திவீரன், அவன் இவன், மங்காத்தா உள்ளிட்ட 85 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளவர் யுவன்சங்கர் ராஜா. இவருக்கும் சுஜன்யா என்பவருக்கும் திருமணம் நடந்து விவாகரத்து ஆகியது.
பின்னர் யுவன்சங்கர் ராஜாவுக்கும் ஷில்பா என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து திருப்பதியில் இன்று காலை யுவன்சங்கர் ராஜாவுக்கும் ஷில்பாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் யுவனின் தந்தை இளையராஜா மற்றும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை நடக்கிறது.

No comments:

Post a Comment